செராட்டோ மலர் மருந்து
செராட்டோ மலர் மருந்து
சிலர் தம் திறமை மீதும்,
தமது சொந்த முடிவுகள் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை.
எப்போதும் மற்றவர்களின் ஆலோசனைகளை மட்டுமே சார்ந்திருப்பார்கள்.
அதில் நஷ்டமேற்பட்ட பின்னரும் கூட எது சரியானது என்று சுயமான முடிவுக்கு வர மாட்டார்கள்,
ஒரு குறிப்பிட்ட மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளும்போது,
வேறு ஒரு நண்பர் மற்றொரு மருத்துவரை குறிப்பிட்டால்
உடனே அவரிடம் சிகிச்சைக்குச் செல்வார்.
இதனால் முழு குணம் ஏற்படாமல் சிரமப்படுவார்,
நம்பிக்கை யோடு சுய முடிவு மேற்கொண்டு செயல்படமாட்டார்.
பிறரது சொற்படி, ஆலோசனைப்படி இயங்கும் இத்தகையவர்களின் பலவீனமான,
தன்னம்பிக்கையற்ற மன நிலையை மாற்றியமைக்க
செராட்டோ என்ற மலர் மருந்து மிகவும் பயன்படும்.